search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் சூப்பர்வைசர்"

    ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் மாமூல் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்திய தினகரன் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு காவல்சரகம் தொண்டராம்பட்டில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை இதற்கு முன்பு ஊருக்குள் இருந்துள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊருக்கு வெளியில் இந்த கடை கொண்டு செல்லப்பட்டது. இந்த கடையில் மேற்பார்வையாளராக ஒக்கநாடு மேலையூரை சேர்ந்த லட்சுமணன் என்பவர் உள்ளார்.

    இந்த கடை ஊரை விட்டு சென்று விடக்கூடாது என்று ஊருக்கு வெளியில் கடை அமைய அமமுக ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராக உள்ள ஆசைத்தம்பி நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆசைத்தம்பி அடிக்கடி டாஸ்மாக் கடைக்கு சென்று இலவசமாக மது வாங்கி செல்வது வழக்கமாம். மேலும் ரூ.10 ஆயிரம் மாமூல் தரவேண்டும் என்றும் கேட்டு வந்தாராம். ஆனால் லட்சுமணன் மாமுல் தரமுடியாது. அவ்வப்போது இலவசமாக மதுபாட்டில் வாங்கி செல்கிறீர்கள். அத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம்.

    இந்நிலையில் நேற்று இரவு டாஸ்மாக் கடைக்கு வந்த ஆசைத்தம்பி இதுகுறித்து கேட்டு லட்சுமணனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த ஆசைத்தம்பி தான் எடுத்து வந்த இரும்பு கம்பியால் டாஸ்மாக் மேற்பார்வையாளர் லட்சுமணனை கடுமையாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்தார்.உடனடியாக அவரை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து லட்சுமணன் பாப்பாநாடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இன்று காலை டாஸ்மாக் மேற்பார்வையாளர் லட்சுமணனை தாக்கியதாக அமமுக ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    டாஸ்மாக் சூப்பர்வைசர் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ. 3லட்சத்து 40 ஆயிரத்தை பறித்து சென்ற 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் -கொடுமுடி ரோட்டில் வாய்க்கால் மேடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இக்கடையின் சூப்பர்வைசராக முத்தூரை சேர்ந்த கார்த்தி (33) பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று கடையில் வசூலான பணத்தையும், காங்கயம் ரோட்டில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தையும் எடுத்து கொண்டு நத்தக் காடையூரில் உள்ள வங்கியில் செலுத்த மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் புதுப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் டாஸ்மாக் சூப்பர்வைசர் கார்த்தியை உதைத்து கீழே தள்ளி விட்டனர்.அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி அவரிடமிருந்து ரூ. 3 லட்சத்து 40 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதில் காயம் அடைந்த கார்த்தி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. பணம் பறித்த கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். டாஸ்மாக் சூப்பர் வைசர் பணம் கொண்டு செல்வதை நன்கு அறிந்தவர்கள் தான் அவரை தாக்கி பணத்தை பறித்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
    ×